விமானபடையில் புதிதாக சேர்க்கபட்ட ஹாக் அதிவேக ஜெட் பயிற்சி விமானங்களில் ஒன்று விபத்துள்ளானது.பிரிட்டனில் இருந்து இந்தவகை விமானங்கள் நூற்றுக்கும் அதிகமாக வாங்கபடுகின்றன.
கடந்த ஃபிப்ரவரி மாதம் தான் முதல் பத்து விமானங்கள் டெலிவரி செய்யபட்டன. ஹாக் விமானங்கள் படையில் இனைக்கபட்ட பின்னரும் உதிரிபாகங்கள் சப்ளையில் பிரச்சனைகள் காரனமாக இயக்கபடாமல் இருந்துவந்தனவாம்.
இந்த விபத்துக்கு காரனம் விமானத்தில் பழைய/தரம்குறைந்த உதிரிபாகங்கள் பொருத்தபட்டது தான் என்று விமானபடை குற்றம்சாட்டுவதாக தெரிகிறது. குறிப்பிட்ட பாகங்கள் சில துருப்பிடித்து இருந்தன என்றும் விமானபடை பிரிட்டன் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியிருக்கிறது.
வெளிநாட்டில் இருந்து வாங்கபட்ட தளவாடங்களில் பிரச்சனை ஏற்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே மிக்-29 விமானங்களை வாங்கியபோதும் நிறைய விமானங்களை உதிரிபாகங்கள் கிடைக்காத காரனத்தால் இயக்கமுடியாமல் விமானபடை தவித்து வந்தது.
சமீபத்திய உதாரனமாக விமானபடையின் பெருமை என்று கருதபடும் சுக்ஹோய்-30 விமானங்கள் சில காலம் இயக்கமுடியாமல் போனது. ரஷ்யாவில் இருந்து டயர்(tyres) சப்ளையில் பிரச்சனையால் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட விமானங்களை கொஞ்ச காலத்துக்கு இயக்க முடியவில்லை.
வெளியே இருந்து ஆயுத கொள்முதல் செய்துவிட்டு தவிப்பது விமானபடை மட்டுமல்ல். கடற்படை மற்றும் ஆர்மியும் இதே போன்ற தொல்லைகளால பாதிக்கபட்டுள்ளன.
கடற்படை தள்வார்(Talwar) ரக கப்பல்களை ஆர்டர் செய்துவிட்டு முழுதாக ஒரு வருட தாமதமாக டெலிவரி வாங்கியது. கப்பல்களில் பொருத்தபட்ட கிளப்(Klub) ஏவுகனையில் பிரச்சனை தான் காரனம் என்று அறிவிக்கபட்டது. பின்னர் வாங்கிய அட்மிரல் கோர்ஷ்கோவ்(இப்போது ஐ.என்.எஸ்.விக்கிரமாதித்யா) சுத்தமாக முன்ற-நான்கு வருட தாமதத்துக்கு பின்னர் தான் டெலிவரி கொடுக்க முடியும் என்று ரஷ்யா தெரிவித்துவிட்டது. அதுவும் பேசிய தொகையில் இருந்து கனிசமான அளவு அதிகாக கொடுத்தால் யோசிக்க முடியும் என்ற கட்டாயத்துடன்.
வெளிநாட்டில் இருந்து வாங்கபடும் ஒவ்வொரு தளவாடமும் பின்னால் அனுமார் வாலை போன்று பிரச்சனைகளுடன் தான் வந்து சேருகின்றன. இவைகளுக்கு இருபது வருடங்களுக்கு உதிரிபாக சப்ளை தேவைபடுகிறது. டயர்களில் ஆரம்பித்து சிறிய oil sealகளை வரை வெளியில் இருந்து வாங்கி தொலைக்க வேண்டிய கட்டாயத்தில் படைகள் தள்ளபடுகின்றன.
நம்பகம் இல்லாத வியாபாரிகளிடம் நாட்டின் 70 சதவீத தளவாடங்களை கொள்முட்தல் செய்வது நாட்டின் பாதுகாப்பையே வெளிநாட்டில் அடகு வைக்கபதற்க்கு ஒப்பான ஒன்று.
இந்திய ஆயுத உற்பத்தி துறையோ இப்போது தான் துளிர்விட்டு கொண்டிருக்கிறது. அரசு நிறுவனங்கள் மட்டுமே ஆயுத உற்பத்தி செய்ய முடியும் என்ற கட்டுபாடுகள் தளர்த்தபட்டுள்ளன.இன்னும் இருபது வருட காலம் படைகள் வெளிநாட்டு ஆயுத வியாபரிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் தான்.