தொடர் குண்டுவெடிப்புகள் : எங்கே தலைமை ?

வருடா வருடம் குறைந்தது முன்று அல்லது நான்கு தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. புதிதாக அரசு செய்யபோவது என்ன?

மத்திய அரசின் குழப்பமான நிலைபாடும், எதிர்வினைகளும் கவலை அளிக்கின்றன.

தீவிரவாத்தால் பாதிக்கபட்ட நாடுகளில் எல்லாம் கடுமையான சட்டங்கள் இயற்றபட்டுள்ளன. இங்கே இன்னும் தீவிரவாதத்தை ஒடுக்க புதிய சட்டம் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் முடியாமல் தொடர்கிறது. மன்மோகன் சிங் அரசின் முதல் கொள்கை முடிவுகளில் ஒன்று முந்தைய அரசு கொண்டுவந்த ‘போடா’ சட்டத்தை வாபஸ்பெற்றது. இருந்த சட்டங்களே போதுமானது என்று கூறிவந்த காங்கிரஸ் தேசிய பாதுகாப்பு சட்டத்தை திருத்தலாமா என்று யோசிக்கிறது.

கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். இத்தனை உயிர்கள் பலியான பின்னர் தான் புத்தி வருகிறது.

அரசின் உயர்மட்ட அளவில் தீவிரவாத்தை எதிர்க்கும் திரானி இல்லாத நிலையில் உளவுநிறுவனங்களும், பாதுகாப்பு படைகளும் அதே போல ஆகிவிடுவது இயற்கை. தெளிவான பார்வையுடன், தைரியமாக தீவிரவாதத்தை எதிர்க்க அரசியல் தலைமை முன்வராத வரையில் அரசு இயந்திரும் மெதுவாக தான் இயங்கும்.

தலைமையின் தயக்கமே தீவிரவாதத்தின் வெற்றி.

Leave a comment